நண்பர்கள் வாசகர்கள் அனைவர்களுக்கும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ்,, யின் மனமார்ந்த‌ ஈத் முபாரக் வாழ்த்துக்கள் ..

Saturday 28 November 2009

லால்பேட்டையில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்ப்பு!!

லால்பேட்டை பெரியபள்ளிவாசலில் காலை 8 மணியளவில் ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நடைபெற்றது.அவ்வமயம் தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மொளலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் சிரப்புரையாற்றினார்.ஜெ.எம்.ஏ.அரபிக்கால்லூரி முதல்வர் மொளலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் பெருநாள் தொழுகை நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர்.காலை 7 மணியிலிருந்தே லால்பேட்டையிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலிருந்தும் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடையணிந்து அணி அணியாக பெரியவர்களும்,இளைஞர்களும்,சிறுவர்களும் ஆர்வபெருக்குடன் கலந்துக் கொண்டனர்.
தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும்,அனைவரின் நல்வாழ்வுக்காகவும்,நலனுக்காகவும்,சமுதாய ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
மேலும் ஊரின் செழிப்பான,சிறப்பான முனேற்றத்திற்க்காகவும் துஆச் செய்யப்பட்டது.பிரார்த்தனைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து கரம் கொடுத்து ஆரத் தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

படம் :அல் நஜாஹ் வீடியோ
லால்பேட்டை .

Thursday 26 November 2009

தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!


அன்புடையீர்!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம....


அல்லாஹ்வின் அருள் நிறைந்த தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் உரித்தாக்குவோமாக!
இந்த இனிய நாளில் நம் ஊரிலிருந்தும்,உலகம் முழுவதிலிமிருந்தும் புனிதக் கடமையை நிறைவேற்ற திருமக்கா சென்றிருக்கும் அனைவர்களின் ஹஜ்ஜும் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக அமைந்திடவும்,
அனைத்து ஹாஜிகளும் நலமுடன் தாயகம் சென்றடையவும் பிரார்த்திப்போமாக!




என்றும் உங்கள் அரவணைப்பில்,
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்.

அல்ஜமா இஸ்லாமிக்பைத்துல்மால் ஜகாத்நிதி வழங்கும் விழா !

Friday 20 November 2009

குர்பானி

துருப்பிடித்த இதயங்களை தூய்மைப்படுத்துவது எப்படி?



Tuesday 17 November 2009

குவைத்தில் ஹஜ் / அரஃபா சிறப்பு நிகழ்ச்சி


கடலழகு ஆராதிக்க மட்டுமா?